Sunday, 22 March 2009

கவிதை


காதல்
- ரூசோ


உன் பாதச் சுவடுகள்
பதிந்த மணல் கொண்டும்
உன் விரல் பட்ட
மரக்கிளைகள் கொண்டும்
உன் வெட்கத்தில்
வழிந்த வர்ணம் கொண்டும்
நமக்கான வீட்டைக் கட்டுவோம்...
அதில்
காற்றும் புகாத அளவுக்கு
காதலை நிரப்பி வைப்போம்...!

No comments: