பூவா தலையா?
பூ கேட்கிறாள்
விதவை
***
முதியோர்களின்
முழு நேரப்
பேச்சிலும்
இளமைக் காலம்
***
கல்லும் இருந்தது
நாயும் இருந்தது
கை உடைந்த
நேரத்தில்
***
அன்னையும்
பிதாவும்..
படித்துக் கொண்டிருக்கிறது
அனாதைக் குழந்தை
***
அதிவேகமாய் ஓடினான்
ஓட்டப் பந்தய வீரன்
அடுத்த வீட்டுப்
பெண்ணுடன்!
***
மாற்று அறுவை
சிகிச்சை செய்து
முடித்தார் மருத்துவர்
நோயாளியை மாற்றி!
***
தேர் வராத
சேரிக்குள்
தேசமே வரும்
தேர்தல் நேரம்!
*****
ஏட்டிக்குப் போட்டி பேசும் பாட்டி
இறந்த பிறகும்
மூடவில்லை வாய்!
*****
வாய்ப்பாட்டு பாடுபவனின் வயிற்றிலும்
பாட்டிலும் பசி
*****
நன்றியுள்ள நாய்
வாலை ஆட்டியது
திருடனுக்கு
*****
மனதில் எழுதுகோல்
பற்றிய கவிதை
மை தீர்ந்த பிறகும்!
*****
எந்த பனித் துளிக்குள்
ஒளிந்து கிடக்கிறது………
என் கவிதை.
*****
நிலவைப் படம் பிடிக்க
முடியாத வருத்தத்தில்
வற்றிய குளம்!
***
தெளிந்த நீரில்
முகம் பார்த்த பிறகும்…
தெளியாத மனசு
***
பாவலர்கள் எழுதி விடுவார்களோ?
பயந்து முட்புதரில்
மறையும் நிலவு
***
நிசப்தமாய் இரு
இசை கேட்கலாம்
மழை வரப்போகிறது
***
தரிசு நிலக்
காட்டில் தவறி விழுந்த
காகிதத்தில் அறுவடைக் காலக் கவிதைகள்
***
ஆயிரம் பேர்
அழைத்தாலும்
ஆகாயத்தில்தான் நிலவு.
***
பச்சைப் பசேலென
அடர்ந்த மரக்காட்டில்………
கோடாரிச் சத்தம்
***
அழகிய வண்ணத்துப்
பூச்சி பறக்கும் திசையெல்லாம்……
உடன் பறக்கும் மனசு
***
உயிரையே வைத்திருக்கிறார்கள்
குழந்தைகள்...................
உயிரில்லாத பொம்மைகளின் மேல்!
***
மருந்து மாத்திரைகள்
தீர்ந்த பிறகும். .........
தீராத நோய்
***
சீமானின் மாளிகை
இடிந்த பிறகு நன்றாகவே தெரிகின்றன........
ஏழைகளின் குடிசைகள்
***
அமைச்சருக்குப்
போட்ட துண்டு எப்படி விழுந்தது. .........
பட்ஜெட்டில்!
***
பால் காய்ச்சித்தான்
குடித்தனம் போக வேண்டும்
சாராயம் காய்ச்சுபவனும்!
***
நிறைய மிட்டாய்கள்
வாங்கித்தரும் தாத்தாவிற்கு
பாவம் பல்லே இல்லை!
***
தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி
***
யாருடைய ஆசியோ?
உயர்ந்து கொண்டே
போகிறது விலைவாசி
***
இல்லாதவனின்
உலக அனுபவம்
வெங்காயம்
***
சுருக்கமாகப்
பேசி முடித்தார்
விரிவுரையாளர்!
நன்றி
- மாமதயானை (நிலாச்சாரல்)