Sunday 22 March, 2009

சென்ரியு கவிதைகள்

நாற்காலி ஆசை
யாரைத்தான் விட்டது...
நாற்காலியில் பொம்மைகள்

கர்த்தர்
நம்மைக் காப்பாற்றுவார்...
சிலுவையில் கர்த்தர்

எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள் திருநங்கைகள்...
சாயம் போன வாழ்க்கை

ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாணவனின் மனதில்...
மரம் வெட்டும் தந்தை

தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி

நன்றி
- மாமதயானை (நிலாச்சாரல்)



No comments: